ஈஷாவில் மகாசிவராத்ரி கொண்டாடிய பிரக்யா

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அகண்டா படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்தவர் பிரக்யா ஜெய்வால் அடுத்ததாக சன் ஆஃப் இந்தியா என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழ் படங்களில் நடிக்க முயற்சி செய்யும் பிரக்யா, மகாசிவராத்திரியை கொண்டாட கோவையில் இருக்கும் சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார் பிரக்யா. அங்கு மகாசிவராத்திரியில் ஆட்டம் பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அங்கிருக்கும் சிவன் சிலைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, மகாசிவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, நிஷா அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் வரிசையில் தற்போது பிரக்யாவும் ஈஷா பக்தராகி உள்ளார்.

Related Stories: