ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் திட்டகுடி நான்குமுனைச்சாலை சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஐப்பசி மாதம் கந்தசஷ்டியை முன்னிட்டு கோயில் நந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சன்னதியில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை ராமேஸ்வரம் திட்டகுடி நான்குமுனைச்சாலை சந்திப்பில் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.