வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டியில் முத்தாலம்மான் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தன்ர். வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நற்பணி மன்றம் சார்பில், 27ம் ஆண்டு முத்தாலம்மன் பொங்கல் திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கியது. அன்று முதல் 13ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேரோட்டத்தையொட்டி நேற்று காலை 6.20 மணிக்கு முத்தாலம்மன் தேரில் பவனி வந்தார். அப்போது ஆடு, சேவல்களை பலியிட்டு, பெண்கள் மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.