கான்ஸ்டபிள் நந்தன் ஆகிறார் யோகிபாபு

சென்னை: யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் கான்ஸ்டபிள் நந்தன். சங்கர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார். படம் குறித்து இயக்குனர் பூபால நடேசன் கூறியது: சசிகுமார், சுந்தர்.சி, களஞ்சியம் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். 15 வருட போராட்டத்துக்கு பிறகு இயக்குனர் ஆகியுள்ளேன். திருவண்ணாமலையில் இன்று தொடக்க விழா நடக்கிறது. அதன் பிறகு ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெறும்.

எனது நண்பர் ஒருவர் கான்ஸ்டபிள். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில் கான்ஸ்டபிள் நந்தனாக நடிக்கும் யோகி பாபுவின் கேரக்டர் கருணையின் உச்சமாக இருக்கும். அதேபோல் மிருகத்தனத்தின் உச்சமாக ரவி மரியா கேரக்டர் இருக்கும். இதில் எமோஷனல் டிராமா ஜானரில் உருவாகும் கதை. எனவே எமோஷனலான யோகி பாபுவை இதில் பார்க்கலாம். அவருக்கு மனைவியாக நடிப்பவருக்கான தேர்வு நடந்து வருகிறது.

The post கான்ஸ்டபிள் நந்தன் ஆகிறார் யோகிபாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: