வேலைக்குச் செல்லாமல் கிராமத்தைச் சுற்றும் ஆதவ் பாலாஜி, காதலை மட்டும் சரியாகச் செய்கிறார். மாணவி மதுனிகாவை தீவிரமாக காதலிக்கும்போது, அவர்களின் காதலுக்கு சாதி குறுக்கே வருகிறது. இதனால், நண்பர்கள் உதவியுடன் ரகசிய திருமணம் செய்துகொள்கின்றனர். மதுனிகாவின் தந்தை ராஜ்கபூர் தனக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ்ச்செல்வம் இருவரையும் கொலைவெறியுடன் துரத்துகிறார். இதனால், நண்பர்களுடன் ஆதவ் பாலாஜியும், மதுனிகாவும் சென்னைக்கு தப்பித்துச் செல்கின்றனர். சாதிவெறியால் துரத்தப்பட்ட அவர்கள், சென்னையில் ஆடுகளம் ஜெயபாலன் தலைமையிலான பாலியல் கொலைக்கும் பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா என்பது மீதி கதை.