கடந்த 1974ல் இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தானும் ரகசிய இடத்தில் அணுகுண்டு சோதனை நடத்தி பதிலடி கொடுக்க முயற்சித்ததாக கூறப்பட்டது. ஜியா உல் ஹக் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த சோதனை முயற்சியை அவர் மறுத்தார். இது வரலாற்றுச் செய்தி. பாகிஸ்தானின் அணுகுண்டு சோதனை முயற்சியை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ கண்டுபிடித்து தடுத்ததாக கூறப்பட்டது. இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு, இந்திய உளவாளிகள் எப்படித் தடுத்தனர் என்பதை கற்பனை கலந்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இந்திய உளவாளி அமன்தீப் (சித்தார்த் மல்ஹோத்ரா), பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் தாரிக் என்ற பெயருடன் இஸ்லாமியராக வாழ்ந்து வருகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பார்வையற்ற பெண் நஸ்ரினை (ராஷ்மிகா மந்தனா) காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தி வரும் இடத்தைப் பற்றிய தகவலைச் சேகரித்து அனுப்பும் அசைன்மெண்ட் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. அதை அவர் எவ்வாறு செய்து முடிக்கிறார்? ராஷ்மிகா மந்தனாவின் காதல் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி கதை.