அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம், ‘குற்றம் புரிந்தால்’. இதற்கு முன்பு ‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு, பெங்களூரு அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.சங்கர், ராம், ரேனிகுண்டா நிஷாந்த் நடிக்கின்றனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார். கபிலன், கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகின்றனர். மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு விரக்தி அடைந்த ஒருவன், தானே நீதியைக் கையிலெடுக்கிறான்.