கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன்

சென்னை: கவுதம் மேனன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் படு தோல்வி அடைந்தன. இந்நிலையில், விஜய் நடிக்கும் லியோ படத்தில் வில்லனாக கவுதம் மேனன் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் பான் இந்தியா படமாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். வேட்டையாடு விளையாடு படத்தின் பாணியில் க்ரைம் திரில்லராக இதை உருவாக்க உள்ளாராம். இதில் விஜய் சேதுபதி, சிபிஐ அதிகாரியாகவும் அபிஷேக் பச்சன் கொலைகாரனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கவுதம் மேனன் இரு தரப்பிலும் பேசி வருகிறாராம்.

கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு, தயாரிப்பாளர் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஒருவேளை தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால், அந்த படம் உருவாகும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: