மும்பை: இந்திய திரையுலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவர், மிருணாள் சென். பெங்காலி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்கள் இயக்கியுள்ள அவர், ஒன்றிய அரசின் பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். பல்வேறு நாட்டு திரைப்பட விருதுகளை வென்றுள்ள அவர் இயக்கி, கடந்த 1969ல் வெளியான ‘புவன் ஷோம்’ என்ற படம், அவரை மிக முக்கியமான இயக்குனராக அடையாளப்படுத்தியது.