ஆனால், விஷால் குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சிலர் கருத்துக்களை கூறி விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இப்போது இது குறித்து மவுனம் கலைத்துள்ளார் விஷால். ‘‘அது எப்படி, சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமென்றாலும் பேசுகிறார்கள். 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை 5 வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன். நான் பார்ட்டிக்கே போறது கிடையாது. நான் கடைசியாக சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன்’’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.
