கோகுல் படத்திலிருந்து சிம்பு அவுட்; பிரதீப் இன்

கோகுல் இயக்கும் படத்திலிருந்து சிம்பு விலகியதால் அதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்து, படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக முன்னணி ஹீரோவை வைத்து அவர் படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக மற்றொரு இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க பிரதீப் கதைகள் கேட்டு வந்தார்.

இந்நிலையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, அன்பிற்கினியாள், ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், சிம்புவுக்காக ஒரு கதையை எழுதியிருந்தார். அந்த படத்துக்கு கொரோனா குமார் என தலைப்பும் வைத்திருந்தார்.

 இந்த படத்தில் நடிக்க சிம்புவும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி சிம்பு விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த கதையை பிரதீப் ரங்கநாதனுக்கு கோகுல் சொல்லியிருப்பதாகவும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.

Related Stories: