ஹோம்பவுண்ட் கதை திருட்டு புகார்: படக்குழு திடீர் விளக்கம்

மும்பை: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் ஆஸ்கர் விருது போட்டியில், இந்​தியா சார்​பில் அனுப்​பி வைக்கப்​பட்​டுள்ள ‘ஹோம்​பவுண்ட்’ என்ற இந்தி படத்தை நீரஜ் கேவான் இயக்​கி​யுள்​ளார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ளது. ஜான்வி கபூர், இஷான் கட்​டர், விஷால் ஜெத்வா நடித்​துள்​ளனர்.

இப்படத்தின் கதை தனது நாவலை காப்​பியடித்து உரு​வாக்​கப்​பட்​டது என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பத்திரிகையாளரும் மற்றும் எழுத்​தாள​ருமான பூஜா சாங்​கோய்வாலா, தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்​றும் நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​துக்கு ஒரு நோட்​டீஸ் அனுப்பி இருந்​தார்.

அதில், ‘கடந்த 2021ல் நான் எழு​திய இதே பெயரிலான நாவலை அடிப்​படை​யாக கொண்டு இப்​படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. எனது நாவலின் காட்​சிகள், உரை​யாடல், கதை அமைப்பு உள்​பட பல்வேறு சம்​பவங்​களை அப்​படியே படமாக்கியுள்ளனர்’ என்று அவர் கூறி​யிருந்​தார்.

இந்நிலை​யில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘இப்​படம் பஷாரத் பீரின் கட்​டுரையை மைய​மாக வைத்து உரு​வாக்​கப்​பட்​டது. அதிகாரப்​பூர்​வ​மான உரிமையை பெற்று தயாரான படம் இது. அதற்​கான எல்லா உரிமை​களும் சட்​டபூர்​வ​மாக பெறப்​பட்​டுள்​ளது. படம் தொடர்பாக வந்​துள்ள நோட்​டீசுக்​கு தர்மா புரொடக்‌ஷன்​ஸின்​ சட்​டக்​குழு முறை​யாக பதிலளித்​துள்ளது’ என்​று விளக்கம் அளிக்கப்பட்டுள்​ளது.

 

Related Stories: