சென்னை : கேரளாவில், கல்லூரி ஒன்றில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் தற்போது நடித்துள்ள மலையாள படத்தின் விளம்பரத்திற்காக, கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மேடையில் அமர்ந்திருந்தபோது வந்த மாணவர் ஒருவர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அபர்ணாவும் அதற்கு தயாராக நிற்க, பூ கொடுத்த அந்த மாணவர் சட்டென அபர்ணாவின் கையைப் பிடிக்க முயன்றார். அவர் கையை இழுத்துக்கொண்டார். மேலும், அவர் தோள் மீது கையை போட முயன்றபோது, அதனை விரும்பாத அபர்ணா அவரது கை, தோள் மீது படாதபடி நழுவிக்கொண்டே சென்றார். பிறகு போட்டோவுக்கு போஸ் தராமல் சென்று அமர்ந்து கொண்டார்.