சென்னை: ‘பார்க்கிங்’ என்ற ஹிட் படத்தை தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். இது அவரது 49வது படமாகும். சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். இதில் சந்தானம் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது தனி ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், இனிமேல் காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்திய அவர், இதில் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்படும் என்றும், முன்னதாக அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகிஇருக்கிறது.