கும்பகோணம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இருந்து அம்பாள்கள் புறப்பட்டு மகாமக குளத்துக்கு சென்றனர். பின்னர் தெப்பத்தில் அலைமகளும், கலைமகளும், மலைமகள் எனும் மங்களாபிகையம்மனாக தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து தெப்ப உலா நடந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை இரண்டாவது சுற்று தெப்பம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.