புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷணா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தன் தாத்தா மீது பாசத்தைப் பொழிந்து, பிறகு அவர் செய்த துரோகத்தை எண்ணி அதிர்ந்து விபரீத முடிவு எடுக்கும் ரக்ஷணா, சிறந்த நடிப்பில் முதலிடம் பெறுகிறார். தாத்தாவாக பாரதிராஜா, மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். யாரையாவது போட்டுத்தள்ள வேண்டும் என்று துடிக்கும் கேரக்டரில் சுசீந்திரன் மிரட்டலாக நடித்துள்ளார். மற்றவர்களும் அந்தந்த கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளனர். வாஞ்சிநாதன் முருகேசன் தனது ஒளிப்பதிவில், பழைய பாரதிராஜாவின் கிராமத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இளையராஜா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். பின்னணி இசையில் காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார். பள்ளிப் பருவத்து காதல் காட்சிகள் பார்த்துப் பார்த்துச் சலித்தவை. மேக்கிங்கில் இயக்குனர் இன்னும் அதிகமாக உழைத்திருக்கலாம். ஆணவப் படுகொலைக்கு எதிராக படம் பேசியிருக்கிறது.
The post மார்கழி திங்கள் -விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.