சமூக வலைதளத்தில் அவதூறு: போலீசில் டொவினோ புகார்

சென்னை: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் டொவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். இவர் கடைசியாக நடித்த 2018 மலையாள படம், ₹100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் இருக்கும் டொவினோ தாமஸை சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஒருவர் அவதூறு கூறி வந்துள்ளார்.

டொவினோ தாமஸை இழிவுபடுத்தும் வகையிலும் தரக்குறைவாகவும் பதிவுகளை வெளியிட்டு வந்தாராம். இதையடுத்து போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கூறியுள்ளார் டொவினோ தாமஸ், இதையடுத்து அவரது புகார் மனு பனங்காடு காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

The post சமூக வலைதளத்தில் அவதூறு: போலீசில் டொவினோ புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: