கொடைக்கானல், மார்ச் 20: கொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கான வட்டார அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
கொடைக்கானலில் மலைவாழ் ஆதிவாசி பழங்குடியின இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. செண்பகனூர் பீக் அமைப்பின் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த வடகவுஞ்சி, மன்னவனூர், கிளாவரை, பாலமலை, மூலையாறு, கோரம் கொம்பு, கடுகு தடி, ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களைச் சேர்ந்த 60 இளைஞர்கள் இந்த போட்டிகளில் பங்கு பெற்றனர். 14 அணிகள் இந்த கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டன.