துவரங்குறிச்சி அருகே வாகன சோதனையில் பறக்கும் படை தீவிரம்

துவரங்குறிச்சி, மார்ச் 23: துவரங்குறிச்சி அருகே வாகன சோதனையில் பறக்கும் படை தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஆய்வின்போது வாகனத்தினுள் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் அல்லது பரிசு பொருட்கள் ஏதேனும் எடுத்து செல்கின்றனரா என சோதனை செய்த பின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர்.

 

 

Related Stories: