நாங்குநேரியில் காரில் கொண்டுசென்ற குடைகள், பழக்கூடைகள் பறிமுதல்

களக்காடு, மார்ச் 23: நாங்குநேரியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசென்ற குடைகள், பழக்கூடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் நாங்குநேரி இசக்கியம்மன் கோயில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பிராஞ்சேரி அடுத்த கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த ரொனால்டு என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி 80 குடைகள், பழம் வைக்கும் 14 கூடைகள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நாங்குநேரி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

 

Related Stories: