ஒட்டன்சத்திரம், மார்ச் 28: பழநி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை மேற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேதாச்சலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post பழநி கணக்கன்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.
