அப்போது தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஒரேவாரத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், ஜம்மு காஷ்மீரின் சில சிறைகளில் உள்ள கைதிகளிடமிருந்து சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிம் கார்டுகள் சரி பார்க்கும் பணியை காவல்துறை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் சிம் கார்டு விற்பனை மோசடி, சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக சிம் கார்டு சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. அனந்த்நாக், புத்காம், புல்வாமா மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் சிம் கார்டு சரி பார்ப்பு நடவடிக்கை பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்” என்றனர்.
The post தேசவிரோத செயல்களுக்கு பயன்படுவதை தடுக்க ஜம்மு காஷ்மீரில் சிம் கார்டு சரி பார்ப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.