திருமணமான பெண் மாயம்

 

தர்மபுரி, அக்.14: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சின்னகம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி தேவிகா(24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம், வீட்டில் இருந்த தேவிகாவை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன், பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தேவிகாவை தேடி வருகின்றனர்.

 

The post திருமணமான பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: