ஷெர்லின் சோப்ரா புகார் எதிரொலி ராக்கி சாவந்த் கைது

மும்பை : நடிகை அளித்த புகாரின் பேரில் ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டார். எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர் ராக்கி சாவந்த். சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து பதிவிடுவது, பொது இடங்களில் ஆபாச உடை அணிந்து பவனி வருவது, காதலர்களை மாற்றிக் கொண்டே இருப்பது என எப்போதுமே தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்வார்.

இதனால் அவ்வப்போது சிக்கலிலும் மாட்டிக் கொள்வார். கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் சில கருத்துக்களை கூறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மும்பை அம்போலி போலீசில் ஷெர்லின் சோப்ரா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மும்பை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் ராக்கி சாவந்த். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அம்போலி போலீசார் ராக்கி சாவந்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: