லண்டன்: கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெய மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாம்பே ஜெய சென்றிருந்தார். இந்நிலையில் அவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியுள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.