மும்பை: நடிகை மிருணாள் தாக்கூர், ‘சீதாராமம்’ படத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமடைந்துள்ளார். அடுத்து 2 தமிழ்ப் படங்களில் நடிக்க இருக்கிறார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அழுதுகொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விளக்குவதற்காக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார். ‘நேற்று கடினமான நாள். இன்று தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் கதைகளில் சில பக்கங்கள் இருக்கும். அதை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நான் என் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நான் கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘இது சில நாட்களுக்கு முன், இக்கட்டான சூழலில் இருந்தபோது எடுத்த புகைப்படம். இப்போதும் அந்த சூழலில் இருந்து வெளியே வர முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.