சென்னை: சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் ஒரு பதிவை விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்தார். அதில், ‘வாழ்க்கை பாடம்’ என்ற ஹேஷ்டேக்குடன் ‘மீண்டும் முயற்சித்தேன். மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என் தவறு இல்லை, அது துரோகம்’ என தெரிவித்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் முதல் மனைவியை பிரிந்து பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்த விஷ்ணு விஷால் வாழ்க்கையில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நினைத்தனர். இது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில் 2வது திருமணத்திலும் விஷ்ணு விஷாலுக்கு பிரச்னை என்ற தகவல் பரவியது.