பாம்பே ஜெயக்கு ஆபரேஷன் முடிந்தது

லண்டன்: ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலமான பாம்பே ஜெய. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முத்திரை பதித்துள்ளார். வெளிநாடு நிகழ்ச்சிகளுக்கு அதிகம் செல்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. அந்த வகையில், லண்டன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததாகவும், அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிபட்டு சுயநினைவை இழந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாம்பே ஜெயக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாம்பே ஜெயயின் உடல்நிலை சீராக உள்ளதென்று அவரின் டிவிட்டர் கணக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், ‘பாம்பே ஜெயக்கு லண்டனில் உடல்நிலை சரி இல்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும்  சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: