யாருடைய காதல் வலையிலும் சிக்க மாட்டேன்: கயாடு லோஹர் அதிரடி

சென்னை: பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘டிராகன்’ என்ற படத்தில் அறிமுகமான கயாடு லோஹர் (25), இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாகி விட்டார். அவர் வெளியிடும் போட்டோ மற்றும் வீடியோக்கள் உடனே வைரலாகிறது. இந்நிலையில் காதல், ஜென் சி, ரிலேஷன்ஷிப் குறித்து கயாடு லோஹரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு சிரித்தபடி பதிலளித்த கயாடு லோஹர், ‘‘இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகின்றனர். எனக்கு தெரிந்த ஒரே ஷிப், கப்பல் மட்டும்தான். நீங்கள் சொல்வது போல் இப்போது ரிலேஷன் ஷிப், சிச்சுவேஷன் ஷிப் என்று ஏராளமான ‘ஷிப்’கள் வந்துவிட்டன. நீங்கள் நினைப்பது போன்ற பெண் நான் இல்லை. அவ்வளவு எளிதாக யாருடைய காதல் வலையிலும் நான் சிக்க மாட்டேன்’’ என்றார்.

Related Stories: