இது குறித்து தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகம்மது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது. அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டிக்கான சிறப்பு பூஜை தகவலை வெளியிட்டது யார்? மோகன்லாலுக்கு தேவசம்போர்டு பதிலடி
