சோஷியல் மீடியா மூலம் சாதாரணமானவரை கூட உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும். அது ஒரு கூர்மையான கத்தி. நேர்மையாக கொண்டு செல்லும்போது பல சாதனைகளை படைக்க முடியும். சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் விதமாகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது’ என்றார். சோஷியல் மீடியா இன்புளூயன்சர்களை ஒருங்கிணைத்து உரிமைகளை பெற்று தருவது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது, புதிய பணி வாய்ப்பை ஏற்படுத்துவது, பயிற்சி முகாம்கள் அமைப்பது, ஒன்றிய மற்றும் மாநில அரசுடன் பேசி நலத்திட்டங்களை பெற்று தருவது போன்றவை இந்த சங்கத்தின் நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
