உதவியாளர்களின் படங்களை தயாரிப்பது ஏன்?: ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

சென்னை: ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சவுத்ரி தயாரித்துள்ளனர்.  கவுதம் கார்த்திக், புதுமுகம் ரேவதி, புகழ் நடித்துள்ளனர். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 7ம்  தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கவுதம் கார்த்திக் கூறுகையில், ‘செங்காடு என்ற கிராமத்தில் 1947ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய ஆகஸ்ட் 14, சுதந்திரம் கிடைத்த பிறகு ஆகஸ்ட் 15, மறுநாள் ஆகஸ்ட் 16 ஆகிய நாட்களில் நடக்கும் கதையுடன் படம் உருவாகியுள்ளது’ என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘ஒரு படம் தொடங்கி முடியும் வரை எல்லா நேரமும் இயக்குனருடன் இருப்பவர்கள், உதவி இயக்குனர்கள்தான். எனவே, அவர்களின் மைனஸ், பிளஸ் பற்றி அந்த இயக்குனருக்கு ஏ டூ இசட் தெரியும். அவர்களை கதை எழுதச் சொல்லி, அதில் நிறைய திருத்தங்கள் சொன்னாலும், இயக்குனர் தனது எதிர்கால நலனுக்கும், படம் வெற்றிபெறுவதற்கும் மட்டுமே ஆலோசனைகள் வழங்குகிறார் என்று, உடனே அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வருவார்கள். எனவேதான் எனது உதவியாளர்களை எனது நிறுவனத்தின் மூலம் இயக்குனர்களாக்கி படம் தயாரிக்கிறேன்’ என்றார்.

Related Stories: