படுத்தபடி அருளும் பரமன்

சுருட்டப்பள்ளி

காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்!  ஆனால் ஈசன் பள்ளிகொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருட்பாலிப்பதை கண்டிருக்க முடியாது. ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார்.  பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளி கொண்டார் என்று பார்க்கலாம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறமுயற்சித்தனர். அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர்.

வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் பரவியது. தேவர்களும் அந்த விஷத்தின் வெப்பம் கொடுமை தாள முடியாமல் தவித்து சிவனை சரணடைந்தனர்.

அப்போது சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி விஷத்தை திரட்டி எடுத்து வரச்சொன்னார். அவரும் விஷத்தை ஒரு நாவற்பழ வடிவில் திரட்டி எடுத்து வந்தார். அதை சிவன் முழுங்க உடன் இருந்த பார்வதி என்ன காரியம் செய்து விட்டீர்கள் என்று விஷம் உள்ளே இறங்காமல் இருக்க கழுத்தினை பிடித்தாள். விஷம் நெஞ்சோடு நின்றது. சிவன் திருநீலகண்டன் ஆனார். இந்த நிகழ்வே பிரதோஷ கதையாக சொல்லப்படுகிறது. விஷம் பரவிய சமயம் பிரதோஷ காலம் தேவர்கள் இங்கும் அங்கும் ஓடினர். அதை நினைவு படுத்தவே சோமசூக்த பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் செய்யப்படுகிறது. இப்படி விஷம் உண்ட சிவன் நந்தி மீது நர்த்தனம் புரிந்தார்.பின்னர் பார்வதியுடன் கைலாயம் செல்லும் வழியில் பார்வதியுடன் இந்த தலத்தில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது.   

பார்வதியின் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் கோலத்தில் சிவன் சுதைச் சிற்பமாகஉள்ளார்.எல்லா ஆலயங்களிலும் சிவன் லிங்க வடிவில் காணப்படுவார். இங்கு தம்பதி சமேதராக சுய ரூபத்துடன் இருப்பது இன்னொரு சிறப்பு.மேலும் இந்த ஆலயத்தில் அனைத்துதெய்வங்களும் தம்பதியராக இருப்பதும் ஒரு சிறப்பு. பிரதோஷம் உருவான தலம் என்றும் முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது. சுருட்டப்பள்ளி என்னும் இந்த தலம் சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி செல்லும் வழியில் ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் இறைவன் பள்ளிகொண்டீஸ்வரர் என்று அழைக்கப்

படுகிறார். இறைவி அமுதாம்பிகை என்று வழங்கப்படுகிறார்.

Related Stories: