பிரசாந்த் தனித்துவமானவர்: பிரியா ஆனந்த் புகழாரம்

சென்னை: பிரசாந்த் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர்கள் தியாகராஜன், கே .எஸ். ரவிக்குமார், நடிகைகள் ஊர்வசி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பிரியா ஆனந்த் பேசுகையில், ‘ஏராளமான சக கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அனைவரை காட்டிலும் பிரசாந்த் தனித்துவமிக்கவர். அவருக்கு சினிமா மீதான பற்றும், தேடலும் அதிகம். இந்த படத்திற்கு விஎஃப்எக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட்டது பிரசாந்த் தான். சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் அவர் அறிந்து வைத்திருக்கிறார்’ என்றார்.

பிரசாந்த் பேசுகையில், ‘இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களுக்கும் நட்சத்திர கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார்கள். அப்பா, இயக்குனர் தியாகராஜன் இந்த விஷயத்தில் நுட்பமாக கவனித்து திறம்பட செயல்பட்டு இருக்கிறார்.ரசிகர்கள் திரையரங்கத்தில் இந்த படத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைவார்கள். அந்த தருணத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.

The post பிரசாந்த் தனித்துவமானவர்: பிரியா ஆனந்த் புகழாரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: