சவுரவ் கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் உருவாக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி, ரசிகர்களால் ‘தாதா’ என்று செல்லமாக அழைக்கப் படுகிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்த சவுரவ் கங்குலி பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது ஆயுஷ்மான் குரானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை விக்ரமாதித்யா மோத்வானி இயக்கு கிறார். லவ் ரஞ்சன், ஆங்குர் கார்க் தயாரிக்கின்றனர். இந்த கேரக்டருக்காக ஆயுஷ்மான் குரானா பயிற்சி பெற்று வருகிறார்.

 

The post சவுரவ் கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: