இந்நிலையில், பகீர் தகவலை வெளியிட்டுள்ள கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன், ‘தினசரி 12 முதல் 13 பாட்டீல் பீர் குடித்ததே கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம்’ என தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மரணத்தை கலாபவன் மணியே தேடிக் கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். இறந்த நாளில் கூட, கலாபவன் மணி 12 பாட்டீல் பீர் குடித்துள்ளார் என்றும் அதில், மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
The post தினமும் 12 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம்: விசாரணை அதிகாரி பகீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.