திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து 6ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் சேவை சாதித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8ம் தேதி பகல்பத்து உற்சவ விழாவுடன் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 6ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் முத்து அபயஹஸ்தம், உபயநாச்சியார் வைர பதக்கம், தங்ககாசு மாலை, அடுக்கு பதக்கம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்திருந்தார். காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் காலை 7 மணிக்கு எழுந்தருளினார்.