ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் தீர்த்தவாரி : ஏராளமான பக்தர்கள் நீராடினர்

உளுந்தூர்பேட்டை:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் 18ம் ஆண்டு பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீஅய்யனார் கோயில் குளத்தில் பஞ்சமி தீர்த்தவாரி உற்சவத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்று முழுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.குன்னத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் போட்டபடி பஞ்சமி திதியில் நீராடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், ஆன்மிக இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Related Stories: