தொட்டியம்: தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த புதிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகவிழா நடைபெற்றது. சிவாலயத்தின் உற்சவத்திற்காக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக புதியதேர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.