இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி இருந்தது. இந்நிலையில், மணீஷ் ஹரிசங்கர் மீது திகங்கனா சூர்யவன்ஷி அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும் மணீஷ் ஹரிசங்கர் மீது ஐபிசி 420, 406 உள்பட 11 பிரிவுகளின் கீழ் போலீசிலும் புகார் அளித்து இருக்கிறார். இதுகுறித்து திகங்கனா சூர்யவன்ஷி கூறுகையில், ‘என்னைப் பற்றி மணீஷ் ஹரிசங்கர் சொன்ன எல்லா விஷயங்களும் பொய். இந்த வெப்தொடர் உருவாகி 2 வருடங்களாகியும் கூட அதை விற்க முடியவில்லை என்பதால், விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். எனவே, மேலும் இதுபற்றி விளக்கம் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்றார்.
The post இயக்குனர் மீது திகங்கனா சூர்யவன்ஷி அவதூறு வழக்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.