இரட்டை இயக்குனர்களின் படத்தில் வைபவ், அதுல்யா

சென்னை: எக்ஸ்டெரோ என்ற மென்பொருள் துறை நிறுவனர் பாபி பாலச்சந்திரன், பிடிஜி யுனிவெர்சல் சார்பில் தயாரிக்கும் படத்தை இரட்டை இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இணைந்து எழுதி இயக்குகின்றனர். ஹீரோவாக வைபவ், ஹீரோயினாக அதுல்யா ரவி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல்.தேனப்பன் நடிக்கின்றனர். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைக்கிறார்.

படம் குறித்து விக்ரம் ராஜேஷ்வர் கூறுகையில், ‘கொள்ளைச் சம்பவத்தை மையப்படுத்தி, முழுநீள காமெடி படமாக உருவாக்கப்படுகிறது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. வைபவ், அவரது அண்ணன் சுனில் ரெட்டி முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படத்தில் வைபவ் செய்யும் திருட்டுகளுக்கு சுனில் ரெட்டி உதவி செய்கிறார். ‘நியாயத்தராசு’, ‘இதயதாமரை’, ‘அமரன்’, ‘துறைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘இந்திர விழா’ ஆகிய படங்களின் இயக்குனர் கே.ராஜேஷ்வரின் மகன் நான். அப்பாவுடன் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிறகு 100 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கிய அனுபவத்தின் அடிப்படையில், எனது பெரியம்மா மகன் அருண் கேசவ்வுடன் இணைந்து இந்த படத்தை இயக்குகிறேன்’ என்றார்.

The post இரட்டை இயக்குனர்களின் படத்தில் வைபவ், அதுல்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: