திருப்பதி கோயிலில் ஷாருக்கான், நயன்தாரா

ஐதராபாத்: திருப்பதி கோயிலில் ஷாருக்கான், நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள படம் ஜவான். அட்லி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்துகொண்டார். இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி, ஷாருக்கான், நயன்தாரா, ஷாருக் மகள் சுஹானா, அட்லி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு திருப்பதி மலைக்கு வந்தனர்.

திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் நேற்று அதிகாலை கோயிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி கும்பிட்டனர். முதல் முறையாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் ஷாருக்கான் வேஷ்டி சட்டை அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையான் கோயிலில் கொடிமரம் துவங்கி மூலவர் வரை கும்பிட்டு, சாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. கோயிலில் இருந்து ஷாருக்கான், நயன்தாரா வெளியே வந்ததும் ரசிகர்கள் அவர்களை முற்றுகையிட முயன்றனர். உடனே பாதுகாவலர்கள் வந்து அவர்களை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

The post திருப்பதி கோயிலில் ஷாருக்கான், நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: