மேலும் உறவுகளைப் பற்றி பேசுவதற்கு இது ஒரு நல்ல நேரம். காமம் கூட ஒரு உணர்ச்சி. அதையெல்லாம் பெரிதுபடுத்தி பார்க்கும் மனநிலையும் மாறிவிட்டது. இது எல்லாமே ஆரோக்கியமான விஷயம்தான். இன்று சினிமா கலைஞர்கள் காதலை மறைக்க வேண்டிய தேவையேயில்லை. உறவை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது துணை பற்றி தாராளமாக பேசலாம். ஆனால் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினால் நான் அதைப் பற்றி விவாதிக்க மாட்டேன். ஒரு காலத்தில் திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் வேலையே கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் தற்போது கியாரா, அங்கத் பேடி, கரீனா கபூர் கான், நேஹா துபியா ஆகியோர் முன்னுதாரணமாக இருக்கின்றனர். இது இப்போது மிகவும் சாதாரணமானது. இருபதுகளின் வயதில் அல்லது முப்பதுகளில் உங்களுக்கு குழந்தை இருந்தால் முற்றிலும் பரவாயில்லை. இவ்வாறு மிருணாள் கூறினார்.
The post காதலை மறைக்கும் காலம் மலையேறிவிட்டது: மிருணாள் தாகூர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.