பயிற்சிக்கு சென்ற நர்சிங் மாணவி கடத்தலா? போலீஸ் விசாரணை

வந்தவாசி, மார்ச் 27: வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது நர்சிங் கல்லூரி மாணவி. இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா தாதாபுரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பயிற்சிக்காக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பின்னர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை தெள்ளார் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து நர்சிங் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

The post பயிற்சிக்கு சென்ற நர்சிங் மாணவி கடத்தலா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: