கே.வி.குப்பம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த திருமணி கிராமத்தில் மாடு விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சுமார் 270 ற்க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. இதில் கால்நடை துறையால் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எஞ்சியுள்ள தகுதிவாய்ந்த காளைகள் களத்தில் கொண்டுவரப்பட்டு, வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து ஓடின. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சாந்தி விழாவை அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றமாறு உறுதிமொழி எடுக்க வைத்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலிஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் ஓடுபாதையில் அனுமதிக்கபட்டன.
சுகாதார துறையினர், மின்வாரிய துறையினர், தீயணைப்பு வீரர்கள், கால்நடை துறையினர், பொதுப்பணி துறையினர், தயாரான நிலையில் இருந்தனர். குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் இரண்டாவது பரிசாக 60 ஆயிரமும் மூன்றாவது பரிசாக 50ஆயிரம் ரூபாயும், என 50 பரிசுகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழா இறுதியில் விழா குழுவினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் மாடு விடும் திருவிழாவை காண குவிந்திருந்தனர். நேற்று நடைபெற்ற மாடுவிடும் விழா சரியாக காலை 10மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து காவல்துறையினரும் விழா குழுவினரும் விழாஓடுபாதையின் அடிமந்தையிலிருந்து வாடி வாசல் வரை உள்ள இருபுற சவுக்கு தடுப்புகள் மேலேயும், ஓடுபாதையின் உள்ளேயும், நின்று கொண்டிருந்த, இளைஞர்களை வெளியேற்றி ஒழுங்கு படுத்திய பின் விழா தொடர்ந்து நடத்தப்பட்டன.
The post மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கே.வி.குப்பம் அடுத்த திருமணியில் appeared first on Dinakaran.