பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி

செங்கம், மார்ச் 25: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், தச்சு தொழிலாளி. இவரது மகன் அஜித்குமார்(28). இவர் நேற்றுமுன்தினம் இரவு புதுப்பட்டியில் இருந்து செங்கம் நோக்கி பைக்கில் சென்றார். செங்கம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்தவுடன் டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான டிராக்டர் டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

The post பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: