தர்மபுரி, மார்ச் 23: தர்மபுரி பிடமனேரி கோவிந்தவர்மா தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (64). இவரது கணவர் நாகராஜன் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூரில் உள்ள மகள் வீட்டுக்கு நாகலட்சுமி சென்றிருந்தார். பின்னர், நேற்று முன்தினம் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி நாகலட்சுமி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.