சேலம், மார்ச்26: சேலம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி வீரப்பன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் நேற்று கண்டர்குல மாணிக்கம் அருகில் உள்ள பன்றிக்கடை பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற திருமலைவீதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ₹5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.