மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு ஆயுள் தண்டனை: ₹1 லட்சம் அபராதம்

சென்னை, மார்ச் 26: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (41). கூலி தொழிலாளியான இவர் தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 29.12.2019ல் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், தந்தை முருகன் போக்சோ வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து திருவள்ளுர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டதால் வழக்கு இங்கு மாற்றப்பட்டது. இதில் நீதிபதி சரஸ்வதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் நிர்மலா என்பவர் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி, மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தை முருகனுக்கு நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து முருகனை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

The post மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு ஆயுள் தண்டனை: ₹1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: