குட்கா கடத்திய விஜய் கட்சி நிர்வாகி கைது

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த இருவரை பிடித்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 607 பாக்கெட் குட்கா, பான் மசாலா, கூலிப், ஹான்ஸ் ஆகியவை இருந்தது. விசாரணையில், இருவரும் திண்டிவனம் ரோசணை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (25), கோபிநாத் (25) என்பதும், ரியாசுதீன் விஜய் மக்கள் இயக்கத்தில் நகர இளைஞரணி தலைவராக இருந்ததும், தற்போது அவர் தவெக நிர்வாகியாக செயல்படுவதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post குட்கா கடத்திய விஜய் கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: